search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் கடத்தல்"

    காஞ்சிபுரத்தில் வீட்டில் இருந்த வாலிபர் கடத்தி பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் காஞ்சிபுரம் நடுத்தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் வேல்முருகன் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் வேல்முருகனை திடீரென குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். 4 பேரும் வழியில் வேல்முருகனை சரமாரியாக தாக்கினர்.

    வீட்டில் இருந்த வேல்முருகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை அருகே வேல் முருகனை திடீரென இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிசென்று விட்டது.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். இதுபற்றி விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேல்முருகனை கடத்தி சென்ற கும்பல் யார்? அவரை திடீரென விடுவித்தது ஏன்? என்பது தெரியவில்லை. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×